'புன்னகை அரசி' நடிகையின் கணவர் சொந்தமாக விமானம், கப்பல் வைத்திருந்தரா?

  • IndiaGlitz, [Tuesday,March 28 2023]

தமிழ் திரை உலகின் புன்னகை அரசி என்று கூறப்படும் கேஆர் விஜயாவின் கணவர் சொந்தமாக விமானம் மற்றும் கப்பல் வைத்திருந்த தொழிலதிபர் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை கேஆர் விஜயாவின் கணவர், தொழில் அதிபர் வேலாயுத நாயர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அனுசரிக்கப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்ஜிஆர், முத்துராமன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார் என்பதும் அதேபோன்று கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட அடுத்த தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஆர் விஜயா நடிப்பில் மாதவன் இயக்கத்தில் உருவான ’முகூர்த்த நாள்’ என்ற திரைப்படத்திற்காக வேலாயுத நாயர் நிதி உதவி செய்தார். அப்போது கேஆர் விஜயாவின் நட்பு கிடைத்தது என்பது அதன் பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதியருக்கு ஹேமலதா என்ற மகள் உள்ளார்.

’முகூர்த்த நாள்’ படத்திற்கு பிறகு நடிக்கவே வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த நிலையில் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் வற்புறுத்தலின் பேரில்தான் கேஆர் விஜயா மீண்டும் நடிக்க வந்தார் என்பதும் அதற்கு பிறகு அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஆர் விஜயாவின் கணவர் வேலாயுத நாயர் ஒரு தொழிலதிபர் மட்டுமின்றி இவருக்கு சொந்தமாக கப்பல், விமானம் இருந்தது என்பதும், பெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கேஆர் விஜயா மற்றும் அவரது கணவர் இருவருமே பிறருக்கு கொடுத்து மகிழ்வதில் சிறந்தவர்கள் என்பதும் அவர்கள் தங்கள் இதயத்தில் இருந்து ஏழை எளியவர்கள் பலருக்கு உதவிகளை செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

முதல் பரிசு பெற்ற இவர் ஒரு ஆண் என்பதை நம்ப முடிகிறதா? ஒரு ஆச்சரிய தகவல்..

மேடை உள்ள படத்தைப் பார்த்தால் ஒரு அழகிய பெண் என்றுதான் அனைவரும் எண்ணுவார்கள். ஆனால் இவர் ஒரு ஆண் என்பதை நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. 

'7ஆம் அறிவு' முதல் '1947' வரை.. ஏ.ஆர்.முருகதாஸ் உடன் உள்ள கனெக்சன் குறித்து சிவகார்த்திகேயன்..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய '7ஆம் அறிவு' முதல் தற்போது அவர் தயாரித்துள்ள '1947' படம் வரை தனக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கியுள்ளார் 

அஜித்துக்கு ஆறுதல் கூறிய லைகா தமிழ்க்குமரன்.. 'ஏகே 62' குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

அஜித்தின் தந்தை சமீபத்தில் காலமான நிலையில் அவருக்கு நேரிலும் தொலைபேசிகளிலும் சமூக வலைதளங்களிலும் பலர் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்

ஆஸ்கர் விருதுக்காக செலவு செய்த தொகை இத்தனை கோடியா? எஸ்.எஸ்.ராஜமவுலி மகன் தகவல்..!

சமீபத்தில் ஆஸ்கர் விருது விழா நடத்தப்பட்ட நிலையில் இந்த விழாவில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கு விருது

நெருங்கிய நண்பரின் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லோகேஷ் கனகராஜ்: என்ன படம்?

தமிழ் திரை உலகின் பிசியான இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் என்பதும் 'விக்ரம்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் அவர் பல முன்னணி நடிகர்களை இயக்க காத்திருக்கிறார் என்பது தெரிந்ததே.