close
Choose your channels

'புன்னகை அரசி' நடிகையின் கணவர் சொந்தமாக விமானம், கப்பல் வைத்திருந்தரா?

Tuesday, March 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் புன்னகை அரசி என்று கூறப்படும் கேஆர் விஜயாவின் கணவர் சொந்தமாக விமானம் மற்றும் கப்பல் வைத்திருந்த தொழிலதிபர் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை கேஆர் விஜயாவின் கணவர், தொழில் அதிபர் வேலாயுத நாயர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அனுசரிக்கப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்ஜிஆர், முத்துராமன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார் என்பதும் அதேபோன்று கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட அடுத்த தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஆர் விஜயா நடிப்பில் மாதவன் இயக்கத்தில் உருவான ’முகூர்த்த நாள்’ என்ற திரைப்படத்திற்காக வேலாயுத நாயர் நிதி உதவி செய்தார். அப்போது கேஆர் விஜயாவின் நட்பு கிடைத்தது என்பது அதன் பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதியருக்கு ஹேமலதா என்ற மகள் உள்ளார்.

’முகூர்த்த நாள்’ படத்திற்கு பிறகு நடிக்கவே வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த நிலையில் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் வற்புறுத்தலின் பேரில்தான் கேஆர் விஜயா மீண்டும் நடிக்க வந்தார் என்பதும் அதற்கு பிறகு அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஆர் விஜயாவின் கணவர் வேலாயுத நாயர் ஒரு தொழிலதிபர் மட்டுமின்றி இவருக்கு சொந்தமாக கப்பல், விமானம் இருந்தது என்பதும், பெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கேஆர் விஜயா மற்றும் அவரது கணவர் இருவருமே பிறருக்கு கொடுத்து மகிழ்வதில் சிறந்தவர்கள் என்பதும் அவர்கள் தங்கள் இதயத்தில் இருந்து ஏழை எளியவர்கள் பலருக்கு உதவிகளை செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.