close
Choose your channels

'புன்னகை தேசம்' பட நடிகரின் மனைவி காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

Monday, June 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த சிலர் காலமாகி வருவது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று கூட தமிழ் நடிகர் கலைமாமணி அமர சிகாமணி என்பவர் காலமானார் என்பதை வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டோம்

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஹம்சவர்தன் என்பவரின் மனைவி காலமாகி விட்டதாக வெளிவந்த தகவலை அடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

’மானசீக காதல்’ ’வடுகப்பட்டி மாப்பிள்ளை’ ’புன்னகை தேசம்’ ’ஜூனியர் சீனியர்’ ’நேற்று வரை நீ யாரோ’ ’இனிது இனிது காதல் இனிது’ ’மந்திரன்’ உள்பட ஒருசில படங்களை நடித்தும் தயாரித்தும் உள்ளார் நடிகர் ஹம்சவர்தன். தற்போது அவர் ‘பீற்று’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவிர்தன் மனைவியுமான சாந்தி ஹம்சவிர்தன் (42) இன்று காலமானார். 

இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த மாதம் சாந்திக்கு கொரோணா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

கொரோனா  நெகடிவ் ஆனபிறகும் சாந்திக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். 

தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்க்கு சாந்தியின் உடல் கொண்டு வரப்பட்டு நாளை மதியம் 2:30மணிக்கு பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.