close
Choose your channels

அல்லு அர்ஜுன் - அட்லி படத்தை உறுதி செய்த 'புஷ்பா' தயாரிப்பாளர்.. 'புஷ்பா 3' எப்போது?

Monday, March 17, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அல்லு அர்ஜுன் நடிப்பில், அட்லி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும், இந்த படத்தில் சில பான் இந்திய நட்சத்திரங்களும் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இருப்பினும், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில், ’புஷ்பா’ படத்தின் தயாரிப்பாளர் இதை உறுதி செய்துள்ளார்.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ’புஷ்பா’ படத்தின் மூன்றாம் பாகத்தை எடுப்பதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும், ஆனால் அதற்கு முன் அட்லி மற்றும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் படங்களில் நடிக்க அல்லு அர்ஜுன் கமிட்டாகி இருப்பதால், அந்த இரண்டு படத்தையும் முடித்து விட்டு வந்த பிறகு ’புஷ்பா 3’ திரைப்படத்தில் அவர் நடிப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும், 2028 ஆம் ஆண்டு ’புஷ்பா 3’ திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் அவர் நடிக்க உள்ளார் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே ’புஷ்பா’ மற்றும் ’புஷ்பா 2’ ஆகிய இரண்டு பாகங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. குறிப்பாக, ’புஷ்பா 2’ திரைப்படம் 1,500 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment