நிருபரின் ஜாதி பெயரை கேட்ட கிருஷ்ணசாமி: செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,May 28 2019]

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பின்போது நிருபர் ஒருவரின் பெயர் என்ன? ஊர் என்ன? ஜாதி என்ன? என்று கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த கிருஷ்ணசாமி இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தனக்கு வாக்களித்த அனைத்து சமுதாய மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்ட அவர், நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். மேலும் தனது பேட்டியின் இடையே மோடி செய்த நன்மைகளை ஊடகங்கள் மறைத்துவிட்டு, அவர் குறித்து எதிர்மறையாகவே செய்தி வெளியிடுவதாகவும் அதனால்தான் பாஜக கூட்டணி தமிழகத்தில் தோல்வி அடைந்ததாகவும் குற்றஞ்சாட்டினார். இதனால் செய்தியாளர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆவேசமாக கேள்வி எழுப்பிய ஒரு நிருபரை நீ எந்த பத்திரிகை? எந்த ஊர்? உன் ஜாதி என்ன? என்று ஒருமையிலும் அநாகரீகமாக கேட்க தொடங்கியதால் பத்திரிகையாளர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது