போயஸ் கார்டன் இல்லத்தை 24 மணி நேரத்தில் கைப்பற்ற வேண்டும். பிரபல அரசியல் கட்சி தலைவர்

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சந்தித்துவிட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகியும் சசிகலாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை. மேலும் அவர் ஆட்சி அமைக்க வாய்ப்பு குறைவு என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆட்சி மட்டுமின்றி அவர் தற்போது இருக்கும் போயஸ் கார்டன் வேதா இல்லமும் விரைவில் கைப்பற்றப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக கையெழுத்து இயக்கம் ஒன்றை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் ஆரம்பித்தார் என்று வெளிவந்த செய்தியை சற்று முன் பார்த்தோம்.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, 'ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும் என்றும் இதற்காக போயஸ் கார்டன் இல்லத்தை 24 மணி நேரத்தில் அரசு கைப்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவிப்பது குறித்து கூறுகையில், 'மக்களால் தேர்வானவர்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார்.

More News

சசிகலாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம். ஓபிஎஸ்-இன் அடுத்த அதிரடி

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து கொண்டு வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றுவது, ஆட்சி அமைப்பது மட்டுமின்றி ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை சசிகலாவிடம் இருந்து மீட்டு நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்பதும் அவரது கடமைகளில் ஒன்றாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்...

கூவத்தூர் விடுதியில் நடப்பது என்ன? காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன் பேட்டி

கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியதாகவும், சுய விருப்பத்தின் பேரிலேயே விடுதியில் அவர்கள் தங்கியிருந்ததாக தெரிவித்ததாகவும், தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் தெரிவித்ததாகவும் காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன் சற்று முன்னர் பேட்டியளித&#

மாபா பாண்டியராஜனை அடுத்து ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு அதிமுக விஐபி

முன்னாள் காவல்துறை அதிகாரியும், மைலாப்பூர் எம்.எல்.ஏவுமான கே.நட்ராஜ் அவர்களும் ஓபிஎஸ் அணிக்கு வரவுள்ளதாகவும், அவர் அனேகமாக இன்று மாலை முதல்வரை சந்தித்து தனது ஆதரவை தெரிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது...

மேலும் ஒரு அதிமுக அமைச்சர் ஓபிஎஸ் அணிக்கு வருகையா?

நேற்று வரை சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து கொண்டிருந்த அமைச்சர் மாஃபா பாண்டியாராஜன் அவர்கள் தற்போது ஓபிஎஸ் அணிக்கு வர தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது...

முதல்வர் ஓபிஎஸ்-க்கு இரண்டு அதிமுக எம்பிக்கள் ஆதரவு

தமிழக அரசியல் தற்போது முயல்-ஆமை கதை போல சென்று கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் 130 எம்.எல்.ஏக்களும், 37 எம்பிக்களும் சசிகலாவுக்கு ஆதரவு என்றும், முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு வெறும் 3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வேகமாக முயல் தூங்கியது போலவும், மெதுவாக சென்ற ஆமை வெற்றி பெற்றது போலவும் ஓபிஎஸ் அவர்களின்