close
Choose your channels

துணை கலெக்டர் பதவியை ஏற்றார் பி.வி.சிந்து

Wednesday, August 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு நடைபெற்று ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் பி.வி.சிந்து. அவருக்கு ஆந்திர மாநில அரசும், தெலுங்கானா மாநில அரசும் போட்டி போட்டு கொண்டு கோடிக்கணக்கில் பணம், வீடு உள்பட பல பரிசுகளை வழங்கியது.
இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு சமீபத்தில் பி.வி.சிந்துவுக்கு குரூப் 1 பணியின் மூலம் துணை கலெக்டர் பதவியை வழங்கியது. இதற்கான அரசாணையை சமீபத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பி.வி.சிந்துவிடம் வழங்கினார். இந்த பதவியை முப்பது நாட்களுக்குள் சிந்து ஏற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கபப்ட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று தனது பெற்றோர்களுடன் CCLA அலுவலகத்திற்கு வந்த சிந்து அதன் தலைமை கமிஷனர் அனில் சந்திரா புனிதா அவர்கள் முன் துணை கலெக்டர் பதவியை ஏற்றுக்கொண்டார். துணை கலெக்டர் பதவியேற்றாலும் பேட்மிண்டன் விளையாட்டில் தனது கவனம் முழு அளவில் இருக்கும் என்றும் தற்போது உலக போட்டிக்கு தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.