தனிமைப்படுத்தப்பட்ட இளைஞருக்கு மனநலம் பாதிப்பு: மூதாட்டியை கொன்றதால் பரபரப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்தே வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களை மாநகராட்சி நகராட்சி ஊழியர்கள் தனிமைப்படுத்தி வருகின்றனர். அவர்களின் வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். அவர் திடீரென தனிமைப்படுத்தப்பட்டதால் மன ரீதியாக பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த வாலிபர் திடீரென தெருவுக்குச் வந்து, அங்கு நடந்து சென்ற மூதாட்டி ஒருவரின் கழுத்தை கடித்து கொலை செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக வந்து மனரீதியில் பாதிக்கப்பட்ட அந்த இளைஞரை மருத்துவனையில் சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

More News

பள்ளி பருவத்திற்கே திரும்பிவிட்டேன்: ராமாயணம் சீரியல் குறித்து பிரபல தமிழ் நடிகை

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கோடிக்கணக்கான மக்கள் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் நாட்டு மக்களின் பொழுதுபோக்கை கணக்கில்

தனிமைப்படுத்தப்பட்டதாக ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம்

தமிழகத்தில் பரவலாக கொரோனா வைரஸ் எதிர்பார்த்ததைவிட நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள்

கொரோனாவில் இருந்து முற்றிலும் மீண்ட சென்னை வாலிபர்: ஒரு மகிழ்ச்சியான செய்தி 

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில், ஒரு ஆறுதல் செய்தியாக

கேலிக்கூத்தாகிய ஊரடங்கு உத்தரவு: மூன்றாவது நிலைக்கு சென்றுவிட்ட இந்தியா

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவின் இரண்டாவது நிலையில் இருந்த போதே சுதாரித்த இந்திய அரசும் இந்தியாவில் உள்ள மாநில அரசுகளும் உடனடியாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தின.

கன்னியாகுமரியில் மேலும் ஒரு உயிரிழப்பு: கொரோனா காரணமா?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் திடீரென உயிரிழந்தார். ஆனால் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இல்லை