உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்… முக்கிய வீரரைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!

ஐபிஎல் 15 ஆவது சீசன் தொடருக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம்பெற்ற குயிண்டன் டி காக் நெகிழ்ச்சியான ஒரு செயலைச் செய்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் என்று அவரைக் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

அதாவது பஞ்சாப் மற்றும் லக்னோவிற்கு எதிரான நேற்றைய ஐபிஎல் 42 ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து லக்னோ களமிறங்கி விளையாடியபோது 13 ஆவது ஓவரில் குயிண்டன் டி காக் பேட்டிங் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அவருக்கு பஞ்சாப் அணி வீரர் சந்தீப் சர்மா பந்து வீசினார். அந்தப் பந்து எட்ஜாகி விக்கெட் கீப்பர் கித்தேஷ் ஷர்மாவின் கைகளுக்குச் சென்றது. உடனே வீக்கெட் கீப்பர் உறுதியாக அவுட் என்று கையை உயர்த்தினார்.

ஆனால் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத நடுவர் நாட் அவுட் கொடுக்க, அங்குதான் சுவாரசியமான ஒரு நிகழ்வு அரங்கேறியது. தான் உண்மையிலேயே அவுட் என்பதை உணர்ந்த குயிண்டன் டி காக், திடீரென்று களத்தை விட்டு வெளியேறினார். நடுவர் நாட் அவுட் என்று கொடுத்தும்கூட வெளியேறிய அவரைப் பார்த்து லக்னோ அணி வீரர்களும் நடுவரும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர். இந்தக் காட்சிகள்தான் தற்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடிய லக்னோ 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

More News

செல்பி எடுக்க அனுமதிக்காத நடிகை: ஆத்திரத்தில் ரசிகர்கள் செய்த மோசமான செயல்!

பிரபல நடிகை ஒருவர் செல்பி எடுக்க அனுமதிக்கவில்லை என்பதற்காக ஆத்திரத்தில் ரசிகர்கள் செய்த மோசமான செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் படத்தின் டைட்டில் இதுவா?

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், ஜீவா, ஜெய் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று நாயகர்களும்  அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று நாயகிகளும் நடித்துள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த

'விக்ரம்' பிளாஷ்பேக் காட்சியில் இந்த பிரபல நடிகை நடித்துள்ளாரா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் பிரபல நடிகை ஒருவர் 10 நிமிட காட்சியில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

என்னை பொருத்தவரை மோடி-அம்பேத்கர் ஒப்பீடு சரிதான்: எஸ்.ஏ.சந்திரசேகர்

என்னை பொருத்தவரை பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசியதில் எந்தவித தவறும் இல்லை என தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.

ஆண்கள் எதற்கு? செக்ஸ் பொம்மையே போதுமே... பரபரப்பைக் கிளப்பும் பிரபல மாடல் அழகி!

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஒருவர், செக்ஸ் பொம்மைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன், திருமணம்