இனவெறிதான் மிகப்பெரிய வைரஸ், அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க வில்லை – ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி காட்டம்!!!

  • IndiaGlitz, [Wednesday,June 03 2020]

 

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜார்ஜ் க்ளூனி “இனவெறிதான் மிகப்பெரிய வைரஸ், கடந்த 400 ஆண்டுகளாக இன்னும் மருந்து கண்டுபிடிக்க வில்லை” என்று காட்டமாக கருத்துத் தெரிவித்து இருக்கிறார். கடந்த மே 25 ஆம் தேதி போலிஸ் பிடியில் சிக்கிக்கொண்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு கொலை என்று பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல மாகாணங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது உலகத் தலைவர்களும் இச்சவம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹாலிவுட் நடிகரான ஜார்ஜ் க்ளூனி அமெரிக்கப் பத்திரிக்கை ஒன்றிற்கு ஒரு கட்டுரையை அனுப்பியிருக்கிறார். மேலும் அந்தப் பத்திரிக்கையின் ஒரு செய்தியில் அவர் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு கைக்கொடுப்போம் எனக் கூறியதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது.

அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் “கறுப்பினத்தவர்கள் கொல்லப்படுவதை நாம் எத்தனை முறை பார்த்திருப்போம். தமீர் ரைஸ், பிலாண்டோ, காண்டில், லக்வான், மெக் டொனால்ட் இப்போது ஜார்ஸ் ஃபிளாய்ட். ஆனால் மற்றவர்களை விட தற்போது நடந்திருக்கும் கொடூரம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது. 4 போலிஸ் காவலர்கள் கழுத்தை நெரித்து ஒரேடியாக ஒரு கறுப்பினத்தவரை கொலை செய்திருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடூரம். அதற்கெதிராக போராட்டங்கள் தற்போது வலுத்து வருகிறது. 1968 க்குப் பிறகு வலுவான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது என்றாலும் விளைவுகள் எப்படியிருக்கும் எனத் தெரியவில்லை. கடந்த 1992, 2014 களின் போதும் இதே போல போராட்டங்கள் நடைபெற்றன.

இதற்குப் பிறகு யாரும் இப்படி கொல்லப்பட மாட்டார்கள் என நம்புவோம். கடவுளை பிரார்த்திப்போம். ஆனால் இது முழுமையல்ல. சட்டங்களில் மாற்றம் வேண்டும். எங்கள் தெருக்களில் தொடர்ந்து இதுபோன்ற இனவெறி நடந்து கொண்டே இருக்கிறது. இதையெல்லாம் தவிர்த்து விட்டு நாங்கள் ஒரே நாடாக வாழ்ந்து வருகிறோம் எனச் சொல்லிக் கொள்கிறோம். இன்றைய அளவில் மனிதர்களை வாங்குவதோ விற்பதோ நடைபெறவில்லை. ஆனால் இதுபோன்ற இனவெறித் தாக்குதல்கள் அதற்கு சற்றும் குறைந்ததல்ல. முழுமையான சட்ட அமலாக்கமும், குற்றவியல் ரீதியிலான சட்டத்திருத்தங்களும் வேண்டும் எனத் தனது கட்டுரையில் கூறியிருக்கிறார்.

More News

கார்த்திக் நரேன் பெயரில் மோசடி: திடுக்கிடும் தகவல்

'துருவங்கள் பதினாறு' என்ற முதல் படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகையே தன் பக்கம் திரும்ப வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன் என்பது தெரிந்ததே.

மகளுடன் எடுத்த புகைப்படத்தை மார்பிங் செய்து அம்மாவுக்கு அனுப்பிய வாலிபர் கைது!

https://tamil.asianetnews.com/crime/kanniyakumari-youth-arrested-for-sharing-women-personal-photos-and-videos-in-social-media-qbc99e

உலகில் மிகச்சிறந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிதான் – இப்படி சொன்னவர் நம்ம ரொனால்டோ!!!

கால்பந்து போட்டிகளில் ஜாம்பவனாகத் திகழும் பிரேசில் வீரர் ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி யை உலகில் மிகச்சிறந்த கால்பந்து வீரர் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்

கொரோனாவே முடியல... அதுக்குள்ள எபோலாவா??? இரண்டாவது அலை தொடங்கி இருப்பதாக WHO அறிவிப்பு!!!

காங்கோவில் எபோலாவின் இரண்டாவது அலை ஆரம்பித்து இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

இனவெறி என்பது கிரிக்கெட்டிலும் இருக்கிறது!!! கொளுத்திப் போட்ட கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில்!!!

ஜமைக்கா நாட்டை சேர்ந்தவரும் வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணியின் வீரருமான கிறிஸ் கெயில்