எம்ஜிஆர் உடனான மலரும் நினைவுகளை பகிர்ந்த நடிகை ராதா!

  • IndiaGlitz, [Monday,January 18 2021]

முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்த நாள் நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் அரசியல் தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் எம்ஜிஆர் பிறந்த நாளை நினைவு கூர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்திற்கு பல திரையுலக பிரமுகர்கள் நேரில் சென்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கமல் ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ராதா எம்ஜிஆர் உடனான தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

எம்ஜிஆர் குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’எம்ஜிஆர் பிறந்த நாளில் ஒரு உண்மையான தலைவரை நாங்கள் நினைவு கூறுவதில் பெருமைப்படுகிறோம். எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்தது இந்த மாநிலத்திற்கு கிடைத்த ஒரு அதிர்ஷ்டமாக கருதுகிறேன். குறிப்பாக சென்னையில் எங்களுடைய ஏ.ஆர்.எஸ் ஸ்டூடியோவை அவர் திறந்து வைத்ததில் எங்களுக்கு மிகப்பெரிய பெருமை. அவரைப் போன்ற ஒரு தலைவரை நாடு இனிமேல் பார்க்குமா என்பது சந்தேகமே’ என்று எம்ஜிஆர் குறித்து நடிகை ராதா பதிவு செய்துள்ளார்.

மேலும் எம்ஜிஆருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் நடிகை ராதா பதிவு செய்திருந்தார் என்பதும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 

More News

மிரட்டப்பட்டாரா சுரேஷ் சக்கரவர்த்தி?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி இறுதிப் போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நான்காவது வாரம் வெளியேற்றப்பட்டார்.

பாலாஜிக்கு எதிராக ஓட்டு போட சுசி கூறியதற்கு இதுதான் காரணமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய இறுதி போட்டியில் ஆரி வின்னர் என்றும், பாலாஜி ரன்னர் என்றும் அறிவிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே

பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஆரி அறிவிப்பு: கோப்பையை வழங்கினார் கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஃபினாலே நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. கிரேண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்காக ஸ்பெஷலாக

எவிக்ட் ஆன சோம், ரம்யாவுக்கு கொடுத்த ஆச்சரியமான கிஃப்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே இன்று நடைபெற்று வரும் நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஐவரில் ஒருவர், சீசன் 3 வின்னர் முகினுடன் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று கமல்ஹாசன் கூறுகிறார்.

பிரபல நடிகை-அரசியல்வாதியுடன் லஞ்ச் சாப்பிட்ட விஜய்சேதுபதி: வைரல் புகைப்படங்கள்!

பிரபல நடிகை மற்றும் அரசியல்வாதியுடன் நடிகர் விஜய் சேதுபதி லஞ்ச் சாப்பிட்டதாக பதிவு செய்யப்பட்ட டுவீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது