நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு: ராதாரவி விளக்கம்

நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதோடு அவரிடம் விளக்கம் கேட்டு நடிகர் சங்க செயலாளர் விஷால் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நடிகர் ராதாரவி விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

நடிகை நயன்தாரா தொடர்பாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.