யாருக்கு என்ன உறவுன்னு தெரியாம பேசக்கூடாது: நயன்தாரா சர்ச்சை குறித்து ராதாரவி


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ராதாரவி கடந்த சில வாரங்களுக்க்கு முன் நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்' திரைப்படத்தின் விழா ஒன்றில், நயன்தாரா குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியதாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து இன்று அவர் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராதாரவி கூறியதாவது:
'கொலையுதிர் காலம்' படவிழாவில் நான் நயன்தாரா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை. ஆனால் மறுநாள் காலையில் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. 'யார் யாருக்கு என்னென்ன உறவுன்னு தெரியாம பேசக்கூடாது' என்ற பாடத்தை நான் கற்று கொண்டேன். நான் பேசியது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் நான் கூறியிருந்தேன். இவ்வளவு பெருந்தன்மையாக நான் நடந்து கொண்டும் என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் நடிகர் சங்க தேர்தலில் திமுக தலையிட்டதால்தான் இனிமேலும் அமைதியாக இருக்கக்கூடாது என்று அதிமுகவில் இணைந்தேன். நான் அதிமுகவில் இணைவது குறித்த முடிவை இரண்டு நாட்களுக்கு முன்புதான் எடுத்தேன்.
கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற பட்டத்தை கொடுத்ததே எங்கள் அப்பா எம்.ஆர்.ராதா தான். ஆனால் அவருடைய மகனை கட்சியில் எந்தவித விளக்கத்தையும் கேட்காமல், ஒரு நோட்டீஸ் கூட அனுப்பாமல் நீக்கியுள்ளனர்.
இவ்வாறு ராதாரவி தனது பேட்டியில் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.