close
Choose your channels

சூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும்: பழம்பெரும் நடிகர் ஆவேசம்!

Monday, September 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை கொடுக்க வேண்டும் என பழம்பெரும் நடிகர் ஒருவர் ஆவேசமாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்த ஆவேசமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அரசியல்வாதிகள் முதல் திரையுலகினர் வரை பலர் இந்த அறிக்கையை பாராட்டினாலும் பாஜகவினர் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்

சூர்யாவின் அறிக்கை வெளியாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்ட போதிலும் இன்னும் பாஜகவினர் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிலர் எல்லைமீறி சூர்யாவின் கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களையும் நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் பழம்பெரும் நடிகரும் சமீபத்தில் பாஜகவில் இணைந்தவருமான ராதாரவி சூர்யா குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது ’நீட்தேர்வு மட்டுமின்றி பல விவகாரங்களில் சூர்யா, அடிப்படை சாராம்சம் கூட தெரியாமல் பேசி வருவதாக குற்றம் சாட்டி உள்ளார். முழு விவரங்கள் தெரியாமல் பேசுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சூர்யா குறித்து ராதாரவி கூறிய இந்த கருத்துக்கு சூர்யாவின் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.