தீபா புருசனெல்லாம் அரசியலுக்கு வரலாம்! ரஜினி வரக்கூடாதா? பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Friday,May 19 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இன்றைய அரசியல் பேச்சு குறித்து பல அரசியல்வாதிகள் கருத்து தெரிவிப்பதை பார்த்தால் அவர் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று பயப்படுவதாகவே புரிந்து கொள்ள முடிகிறது என்று பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்றைய தமிழக அரசியல் வெற்றிடத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாம் என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் அவருடன் பல திரைப்படங்களில் நடித்து இருப்பவருமான ராதாரவி, ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து கருத்து கூறியபோது, 'ரஜினிகாந்த் எதுவாக இருந்தாலும் கடவுள் ஆணைபடி தான் முடிவு எடுப்பார் என்கிறார். எனவே அவர் எந்த முடிவு எடுத்தாலும் வரவேற்கத்தக்க முடிவு தான். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். தமிழக மக்களிடம் அவர் அதிகமான புகழ், பணம் சம்பாதித்து உள்ளார். எனவே இந்த மக்களுக்கு செலவு பண்ண தயாராக இருக்கிறார் என நினைக்கிறேன்.

இதனை அவர் அரசியலுக்கு வரும்போதுதான் பார்க்க வேண்டும். அவர் யார், யாரை நல்லவர் என நினைக்கிறாரோ அவர்களை வைத்து கொள்ளலாம். தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை' என்று கூறினார். ராதாரவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

More News

பிரதமர் மோடிக்கு கதை சொன்ன சச்சின் தெண்டுல்கர்

கிரிக்கெட் உலக சூப்பர் ஸ்டார் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

ஸ்டாலினை பாராட்டிய ரஜினி மோடியை ஏன் பாராட்டவில்லை. தமிழிசை கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பேசிய அரசியல் குறித்த பேச்சு தமிழக அரசியலில் ஒரு புயலை கிளப்பிவிட்டது...

ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து ஓபிஎஸ் கூறியது என்ன?

நீண்ட வருடங்களுக்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடந்த 15ஆம் தேதியில் இருந்து சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த செய்தியை விட அவர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அரசியல் குறித்த கருத்து கடந்த ஐந்து நாட்களாக டிரெண்டில் உள்ளது. ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து கிட்டத்தட்ட அனைத்து தமிழக அரசியல்வாதிகளும் கரு

நான் ஒரு பச்சைத்தமிழன் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதன் முழுவிபரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 15ஆம் தேதி முதல் சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்றுடன் முதல்கட்ட ரசிகர்களுடனான சந்திப்பு முடிவடைந்தது. ரசிகர்கள் சந்திப்பின் முதல் நாள் ரஜினி பேசிய சில அரசியல் கருத்துக்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பலவதந்திகள் பரவிய நிலையில் இன்றைய கடைசி தினத்தில் அது

'சென்னை 28' நடிகைக்கு ஆண்குழந்தை

தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன் மகளும், சென்னை 600028', 'அஞ்சாதே' உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகையுமான விஜயலட்சுமிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.