சீரியலுக்கு வரும் விஜய் தந்தை.. ராதிகா தான் ஜோடியா? டைட்டில் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,February 28 2023]

தமிழ் திரை உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் முதல் முறையாக ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சி தொடரை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிப்பதோடு அவர் முக்கிய இடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான ’நீதிக்கு தண்டனை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ராதிகா. அதுமட்டுமின்றி தொலைக்காட்சிகளில் பல வாணி ராணி, சித்தி உள்பட பல தொடர்களை தயாரித்து நடித்து உள்ளார் என்பதும் அவை மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ராதிகாவின் ராடான் நிறுவனம் தொலைக்காட்சி தொடர் ஒன்றை மீண்டும் தயாரிக்க இருக்கிறது. இதுவரை ராதிகாவின் தொடர்கள் சன் டிவியில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது இந்த தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் இந்த தொடருக்கு ’கிழக்கு வாசல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

எஸ்.ஏ. சந்திரசேகர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த தொடரில் ’பூவே பூச்சூடவா’ தொடரில் நடித்த ரேஷ்மா, ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ தொடரில் நடித்த அஸ்வினி உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் ராதிகாவும் இந்த தொடரில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தொடரில் எஸ்.ஏ.சிக்கு ஜோடியாக ராதிகா நடிக்கின்றாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More News

குக் வித் கோமாளி.. மணிமேகலை விலகியதற்கு காரணம் இதுதானா?

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை சமீபத்தில் விலகியதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அவருடைய விலகலுக்கு என்ன காரணம் என்பது குறித்து சமூக  ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவி

பெரிய அதிசயங்கள் நடப்பதற்கு முன் சின்ன தடங்கல் வந்து கொண்டே இருக்குமாம்.. விக்னேஷ் சிவனின் தத்துவங்கள்..

 இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு சில தத்துவங்களை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நமீதாவை இதுவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை.. கணவர் வீரேந்திர சவுத்ரி ஆதங்கம்..!

 நடிகை நமீதாவை இதுவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் அவரை  கிளாமருக்காக கமர்சியலாக மட்டுமே பயன்படுத்தினார்கள் என்றும் அவரது நடிப்பு திறமையை யாரும் வெளிப்படுத்தவில்லை

நடுரோட்டில் ஆண் நண்பருடன் சண்டை: சிவராத்திரியில் ஈஷா மையத்திற்கு வந்த நடிகையால் பரபரப்பு..!

 சிவராத்திரி கொண்டாட கோவை அருகே உள்ள ஈஷா மையத்திற்கு வந்த நடிகை ஒருவர் நடுரோட்டில் தனது ஆண் நண்பருடன் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

என் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்.. நீங்களா எதாவது கிளப்பி விடாதீங்க.. இயக்குனர் மோகன் ஜி

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான 'பகாசூரன்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றபோதும் வசூல் அளவில்