தனது திருமண வாழ்க்கை குறித்து வருத்தம் தெரிவித்த ராதிகா ஆப்தே

  • IndiaGlitz, [Friday,March 16 2018]

'கபாலி' நாயகி ராதிகா ஆப்தே தைரியமுள்ள நடிகைகளில் மிகச்சிலரில் ஒருவர் என்பதையும், சமீபத்தில் அவர் தன்னிடம் வாலாட்டிய ஒரு பிரபல நடிகரின் கன்னத்தில் அறைந்த சம்பவத்தை கூறினார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தனது குடும்ப வாழக்கை குறித்த ஒரு தகவலை அவர் தற்போது தெரிவித்துள்ளார். ராதிகா ஆப்தே தனது கணவரை ஒவ்வொரு முறை சந்திக்க செல்லும்போது ஏற்படும் செலவுகளையும் தங்களுடைய ஒவ்வொரு சந்திப்பும் உண்மையிலேயே ரொம்ப காஸ்ட்லியானது என்றும் தெரிவித்துள்ளார்

ராதிகா ஆப்தே பாலிவுட் படங்களில் நடித்து வருவதால் மும்பையிலும், அவரது கணவர் தொழில் காரணமாக லண்டனிலும் இருந்து வரும் நிலையில் தனது கணவரை சந்திக்க ராதிகா நேரம் கிடைக்கும்போது லண்டனுக்கு சென்று வருகிறார். மாதம் இரண்டு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு மூன்று முறை என மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணம் செய்வதால் தங்களுடைய ஒவ்வொரு சந்திப்புக்கும் அதிக செலவாகிறது என்றும், அதுமட்டுமின்றி உலகின் இரண்டு மிக காஸ்ட்லியான நகரங்களில் இருவரும் வசிப்பதால் அதற்கான செலவும் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் குடும்பம், தொழில் இரண்டையும் பேலன்ஸ் செய்ய இதனை தவிர்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

More News

செய்தியாளர்களின் கேமிராவை உடைத்து சண்டை போட்ட ஷமியின் மனைவி

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் சமீபத்தில் தனது கணவரின் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் திடுக்கிடும் பல குற்றச்சாட்டுக்களை கூறினார்.

சுசீந்திரனின் 'ஏஞ்சலினா' குறித்த முக்கிய அப்டேட்

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் கடந்த சில மாதங்களாக 'ஏஞ்சலினா' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்

உண்மை சம்பவ த்ரில் படத்தில் வரலட்சுமி

பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அதிக வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருப்பவர் வரலட்சுமி சரத்குமார்.

விக்னேஷ் சிவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த சூர்யா

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் இந்த ஆண்டு வெளியான வெற்றிப்படங்களில் ஒன்று.

குரங்கணி காட்டுத்தீ: 14ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் டிரெக்கிங் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் சிக்கியதில் ஏற்கனவே 11 பேர் மரணம் அடைந்தனர்.