close
Choose your channels

கொரோனா பாதிப்பு குறித்து ராதிகா சரத்குமார் விளக்கம்!

Friday, April 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராதிகாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் நேற்று செய்திகள் வெளியான நிலையில் இன்று அவர் தனது டுவிட்டரில் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் காசோலை மோசடி வழக்கில் சிக்கிய ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் அதன் பின் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இதுகுறித்த வழக்கு விசாரணையின்போது ராதிகா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் ஆஜராகவில்லை என்று அவரது தரப்பில் கூறப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து ராதிகா விரைவில் குணமடைய வேண்டுமென கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரனோ பாதிப்பு இல்லை என்றும் தனக்கு கொரோனா நோய் பாதிப்பு இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்திகள் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் தான் இரண்டாவது தடுப்பூசி டோஸ் எடுத்துக் கொண்டதில் தனக்கு உடம்பு வலி மட்டும் தான் இருக்கிறது என்றும் தற்போது அதுவும் சரியாகி விட்டதால் பணியை தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.