close
Choose your channels

ரஜினியை அடுத்து 42 வருட நிறைவு விழாவை கொண்டாடும் திரையுலக பாஞ்சாலி!

Monday, August 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகமான ’அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி 45 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து நேற்று முதல் ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவரின் 45 ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ராதிகா திரையுலகில் 42 ஆண்டுகளை நிறைவு செய்ததை தனது டுவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான திரைப்படம் ’கிழக்கே போகும் ரயில்’. இந்த திரைப்படத்தில் நடிகை ராதிகா ’பாஞ்சாலி’ என்ற கேரக்டர் மூலம் அறிமுகமானார் என்பதும், அவரது கேரக்டரை சுற்றி தான் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் கடந்த 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸானது. இதனையடுத்து இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி 42 வருடங்கள் ஆனதை அடுத்து நடிகை ராதிகா தனது சமூகத்தில் நினைவு கூர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் இவ்வளவு தூரம் திரையுலகில் பயணம் செய்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, நான் என்னுடைய வேலையை தினமும் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, எனக்கு சிறந்ததைக் கொடுத்து, என் வேலையை செய்து வருகிறேன். அதுதான் இந்த பயணத்தை எனக்குக் கொடுத்தது. அனைவருக்கும் நன்றி’ என்ரு தெரிவித்துள்ளார்.

நேற்று ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் 45 ஆண்டு திரையுலக பயணம் குறித்து ‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ என்று ஒரு டுவிட்டை பதிவு செய்தார். ரஜினியும் ராதிகாவும் அடுத்தடுத்து தங்களது 45 மட்டும் 42 ஆண்டு திரையுலக பயணத்தை நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.