close
Choose your channels

அமிதாப், சூர்யா பணியை தொடரும் ராதிகா!

Thursday, October 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’கௌன் பனேகா குரோர்பதி’ என ஹிந்தியில் அமிதாப் பச்சனும், ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்று தமிழில் சூர்யாவும் நடத்திய நிகழ்ச்சி குறித்து அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியில் போட்டியில் கலந்துகொள்பவர்கள் சரியான கேள்விகளுக்கு பதில் அளித்தால் ஒரு கோடி வரை பரிசை வெல்லலாம் என்பதுதான் போட்டி.

இந்த போட்டிக்கு ஆடியன்ஸ்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ’கோடீஸ்வரி’ என்ற போட்டி விரைவில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான விளம்பரங்கள் தற்போது அந்த தொலைக்காட்சியில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை நடிகை ராதிகா தொகுத்து வழங்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது.

இந்த தகவலை தற்போது ராதிகா உறுதி செய்துள்ளார். முதல்முறையாக பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ’கோடீஸ்வரி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் தான் மகிழ்ச்சி அடைவதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.