close
Choose your channels

'உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே': சித்ஸ்ரீராம் மயக்கும் குரலில் 'ருத்ரன்' பாடல்..!

Sunday, April 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ருத்ரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சிங்கிள் பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

சித்ஸ்ரீராமின் மயக்கும் குரலில் உருவான ’உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே’ என்று தொடங்கும் இந்த பாடலை கபிலன் எழுதி இருக்க ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்துள்ளார்.

ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இன்று வெளியாகியுள்ள மெலடி பாடலின் சில வரிகள் இதோ:

உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே’
உன் வாசம் தீண்டும் இந்த நாட்கள் போதும் கண்ணே
நீலவானம் நீயடி, உனை நீங்கினால் உயிரேதடி
நீதானே யாரும் இல்லா நெஞ்சில் தேடி வந்த சொந்தம் நீதானே
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று ஓசை மின்னல் போல ஆனதே

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.