முடி முடி முடி பகை முடி, வலி கொடுத்தவன் கதை முடி: 'ருத்ரன்' சிங்கிள் பாடல்..!

  • IndiaGlitz, [Thursday,March 16 2023]

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கதிரேசன் தயாரித்து இயக்கும் ‘ருத்ரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ’பகைமுடி’ என்ற சிங்கிள் பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த பாடலை திவாகர் பாடியுள்ளார் என்பதும் கருணாகரன் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அகோரிகளுடன் ராகவா லாரன்ஸ் ஆவேசமாக நடனமாடி இருக்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

’காஞ்சனா 2’ படத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸ் உடன் சரத்குமார் நடித்துள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இன்று வெளியாகியுள்ள ‘பகைமுடி’ என்ற பாடலின் முதல் சில வரிகள் இதோ:

முடி முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் கதை முடி
அடி அடி அடி இது சிவன் அடி
பகை விலகும் உறியடி

குமுறுதே குமுறுதே நெஞ்சம் குமுறுதே
பகையினை முடித்திட உயிரும் உறுமுதே
உறுமுதே உறுமுதே சினமும் உறுமுதே
சதையினை தாண்டியே உதிரம் கொதிக்குதே..

More News

உதயநிதியின் 'கண்ணை நம்பாதே' ரன்னிங் டைம் இவ்வளவுதானா?

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'கண்ணை நம்பாதே' என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்

'லியோ'வில் 30 விதமான லுக்கில் விஜய்? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்..!

'லியோ' படத்தில் நடித்து வரும் விஜய்க்கு 30 விதமான ஹேர்ஸ்டைல் லுக் பரிசீலனை செய்யப்பட்டு அதில் ஒன்றுதான் தேர்வு செய்யப்பட்டதாகவும் அந்த லுக்கில் தான் தற்போது அவர் இந்த படத்தில் நடித்து வருவதாகவும்

காஷ்மீருக்கு பின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? 'லியோ' குறித்த மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடந்த நிலையில்

அருள்நிதி அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்: கையில் அரிவாளுடன் ஆவேசமான ஃபர்ஸ்ட்லுக்..!

 தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அருள்நிதி நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ள நிலையில் கையில் அருவாளுடன் ஆவேசமாக

இளவரசி டயானா கைது செய்யப்பட்டாரா? வரலாற்றைக் கிளறும் ஆச்சர்ய தகவல்!

உலகம் மக்களால் விரும்பப்பட்ட இங்கிலாந்து இளவரசி டயானா ஒருமுறை போலீஸாரால் கைது செய்யப்பட்டார் எனும் தகவல் வெளியாகி இருக்கிறது.