close
Choose your channels

ஜோதிகா, சிம்ரன், கைரா அத்வானி: 'சந்திரமுகி 2' படத்தின் நாயகி குறித்து ராகவா லாரன்ஸ்!

Saturday, August 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’ திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 15 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகவுள்ள ’சந்திரமுகி 2’ படம் உருவாகவிருப்பதாகவும் இதில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியானது

இந்த நிலையில் ’சந்திரமுகி 2’ திரைப்படத்தில் வேட்டையன் என்ற கொடுங்கோல் மன்னன் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாகவும், முதல் பாகத்தில் நடித்த மனோதத்துவ டாக்டர் வேடத்திலேயே ரஜினிகாந்த் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. மேலும் சந்திரமுகி கேரக்டரில் முதல் பாகத்தில் நடித்த ஜோதிகாவே நடிப்பார் என்றும், அதன்பின் அந்த கேரக்டரில் சிம்ரன் அல்லது கைரா அத்வானி நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். சந்திரமுகி 2’ படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி தற்போது நடந்து வருவதாகவும், இந்த படத்தில் ஜோதிகா, சிம்ரன், கைரா அத்வானி நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என்றும், இதுவரை நாயகி யார் என்பது குறித்த முடிவெடுக்கவில்லை என்றும் திரைக்கதை அமைக்கும் பணி முடிந்ததும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ‘சந்திரமுகி 2’ படத்தில் சந்திரமுகி கேரக்டரில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.