அரசியல் வருகை குறித்து ராகவா லாரன்ஸ் கருத்து!

  • IndiaGlitz, [Sunday,August 09 2020]

எந்த ஒரு இயற்கை பேரிடர் வந்தாலும் முதல் நபராக பொது மக்களுக்கு உதவி செய்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ் என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் கோடிக்கணக்கில் தனது சொந்த பணத்தை மக்களுக்காக செலவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அவர் விரைவில் அரசியலில் நுழைவார் என்றும், அரசியலுக்கு வருவதற்காக தான் அவர் இந்த உதவிகளை செய்து வருவதாகவும் ஒரு விமர்சனம் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் தனது அரசியல் குறித்து ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அரசியலுக்கு வந்து ஒரு பதவியை வகித்து அதன் பிறகு ஏழை மக்களுக்கு நான் தொண்டு செய்வேன் என்று கூறி நேரத்தை வீணடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியாக இருந்து சமூகத்திற்காக சேவை செய்வது நல்லது என்று நான் எப்போதும் நம்புகிறேன்.

இதற்கு முன்பு நான் பதிவிட்ட வீடியோ எனது 12 வருட முயற்சி மற்றும் நம்பிக்கையின் சான்று. அவர்களின் கனவுகள் நனவாகியிருப்பதை நீங்கள் காணலாம். இந்த குழந்தை உட்பட, மேலும் 200 குழந்தைகள் படிக்கின்றனர். அரசியலில் நுழையாமல் இதைச் செய்ய முடியும். என்று கூறியுள்ளார்.

More News

பிறந்தநாளில் தளபதி விஜய்க்கு சேலஞ்ச் விடுத்த மகேஷ்பாபு: வைரலாகும் வீடியோ

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு தென்னிந்திய திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

ராம்கோபால் வர்மாவின் 'டேஞ்சரஸ் லெஸ்ப்பியன்': ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

இந்த கொரோனா விடுமுறை காலத்தில் கிளுகிளுப்பான அதே நேரத்தில் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படங்களை ஓடிடி பிளாட்பாரத்திற்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே

தென்னிந்திய மாஸ் நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய டேவிட் வார்னர்!

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த கொரோனா விடுமுறையில் அவ்வப்போது தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களின் பாடல்களுக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன்

இன்று ஒரே நாளில் 2 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி எம்.எல்.ஏக்களும் கொரோனா பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

உயிரை காப்பாற்றிய ரூ.20 ஆயிரம் அபராதம்: கோழிக்கோடு விமானத்தை தவறவிட்டவரின் அனுபவம்

துபாய் விமான நிலையத்தில் அபராதம் விதிக்கப்பட்டதால், அபராதம் கட்டச் சென்றதன் காரணமாக விபத்துக்குள்ளான கோழிக்கோடு விமானத்தை தவற விட்ட ஒருவரின் அனுபவம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது