ராகவா லாரன்ஸ் படக்குழுவினர்களுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

  • IndiaGlitz, [Monday,August 14 2017]

ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் ரிலீஸ் ஆன தினமே 'மக்கள் சூப்பர் ஸ்டார்' பட்டத்தினால் பெரும் சிக்கலை படக்குழுவினர் சந்தித்தனர். அந்த சிக்கலை தீர்ப்பதற்குள் ராகவா லாரன்சுக்கும், இயக்குனர் சாய்ரமணிக்கும் போதும் போதும் என்றாகிவிட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் குழுவினர்களுக்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் கலவரத்தில் இறந்த காவல்துறை அதிகாரிகளின் புகைப்படங்களை காண்பிக்கும் காட்சி ஒன்று வரும். இந்த காட்சிக்காக உண்மையிலேயே கலவரத்தில் இறந்த காவல்துறை அதிகாரிகளின் புகைப்படங்களை காட்ட இயக்குனர் சாய்ரமணி முடிவு செய்தாராம். இந்த பொறுப்பை படக்குழுவினர் முக்கிய நபர் ஒருவர் ஏற்றுக்கொண்டு அவர் இதுகுறித்த விபரங்களை இண்டர்நெட்டில் தேடி ஒருசில புகைப்படங்களை கண்டுபிடித்து இயக்குனரிடம் கொடுத்துள்ளார். இந்த காட்சிக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

ஆனால் தற்போது இந்த புகைப்படங்களில் இருப்பவர்களில் ஒரு அதிகாரி உயிருடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இண்டர்நெட்டில் டவுன்லோடு செய்யும்போது தெரியாமல் இவருடைய புகைப்படமும் டவுன்லோடு ஆகியுள்ளது. இதை சமீபத்தில் அறிந்த அந்த காவல்துறை அதிகாரி அதிர்ச்சி அடைந்து படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏற்கனவே இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறாமல் தயாரிப்பாளர் திண்டாட்டத்தில் இருக்கும் நிலையில் தற்போது அந்த அதிகாரியின் நீதிமன்ற வழக்கையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

More News

விமான பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த பிக்பாஸ் பங்கேற்பாளர்

பிக்பாஸ் தமிழ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகர் ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

நீங்க எல்லோரும் போய் சாவுங்க: எரிச்சலின் உச்சத்தில் ரைசா

சக்தி இல்லை என்றால் சிவன் இல்லை என்பது உலக வழக்கு. சக்தி இல்லையேல் காயத்ரி இல்லை என்பது பிக்பாஸ் வழக்கு. சக்தி போன சோகத்தில் இருந்து மீளாத காயத்ரி தனது அத்தனை கோபத்தையும் ரைசா மீது காட்ட தொடங்குகிறார் என்பது இன்றைய புரமோ வீடியோவில் இருந்து தெரியவருகிறது...

ரூ.38 ஆயிரம் கோடிக்கு மின்கட்டண பில் அனுப்பிய மின்வாரிய துறை

மின்வாரிய கட்டணம் சில சமயம் திடீரென லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் வந்து வீட்டின் உரிமையாளரின் மாரடைப்புக்கு காரணமாக அமையும், அந்த வகையில் சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒருவருக்கு ரூ.38 ஆயிரம் கோடி மின்கட்டண பில் வந்துள்ளது...

ஆனந்த யாழை மீட்டிய அற்புத கவிஞர் நா.முத்துகுமார்

தமிழ் திரையுலகில் ஆனந்த யாழை மீட்டிக்கொண்டிருந்த ஒரு கவிஞர் திடீரென தனது பயணத்தை முடித்து கொண்டது திரையுலகிற்கு மட்டுமின்றி ஒவ்வொரு ரசிகனுக்கும் மிகப்பெரிய இழப்பு...

முன்னாள் காதலியின் புகைப்படங்களை பேஸ்புக்கில் போட்ட வாலிபர் கைது

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை அவரது முன்னாள் காதலர் திருமணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததால் கைது செய்யப்பட்டார்...