close
Choose your channels

7 வருடங்களுக்கு முன் எஸ்பிபி குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகர்

Saturday, August 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தாலும் இன்று அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அவர் நலமாக இருப்பதாகவும் எஸ்பிபி குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று பாரதிராஜா இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பலர் அவருக்கு பிரார்த்தனை செய்தும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகரும் நடன இயக்குனரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்

மேலும் அவர் ஒரு மிகப்பெரிய பாடகர் என்றும் அது மட்டுமன்றி மிகச் சிறந்த மனித நேயம் உள்ளவர் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் அவர் தன்னுடைய குழந்தைகள் இருக்கும் டிரஸ்ட்டுக்கு வந்து அவரே தனது கைகளால் குழந்தைகளுக்கு உணவுகளை வழங்கினார் என்றும் அந்த அளவுக்கு அவர் ஒரு மிகப் பெரிய மனிதர் என்றும் அவர் கூறினார்

மேலும் தானும் தனது குழந்தைகளும் ராகவேந்திர சுவாமிகளிடம் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்வதாகவும், அதே போல் ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.