ரகுவரன் இன்று உயிருடன் இருந்திருந்தால்.. நினைவு தினத்தில் மனைவி ரோகிணியின் நெகிழ்ச்சியான பதிவு..!

  • IndiaGlitz, [Sunday,March 19 2023]

நடிகர் ரகுவரன் கடந்த 2008 ஆம் ஆண்டு இதே நாளில் காலமான நிலையில் அவரது நினைவு தினத்தில் அவரது மனைவி நடிகை ரோகினி நெகிழ்ச்சியான பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கடந்த 1982 ஆம் ஆண்டு ’ஏழாவது மனிதன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகர் ரகுவரன். அதன் பிறகு அவர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் பல படங்களில் வில்லன் மற்றும் குண சித்திர வேடங்களில் நடித்துள்ளார்

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்பட 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் அவரது படங்கள் பல படங்கள் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி உடல் நலக்குறைவால் ரகுவரன் காலமானார். அவரது மறைவு தமிழ் திரை உலகை அதிர்ச்சி அடையச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரகுவரன் மறைந்த 15-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் அவரது மனைவி ரோகிணி தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவை செய்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாள் ஒரு சாதாரண நாளாக தொடங்கி எனக்கும் எனது மகனின் வாழ்க்கையை மாற்றிய நாளாக அமைந்தது. ரகுவரன் இன்று உயிரோடு இருந்திருந்தால் தற்போதைய சினிமாவை விரும்பி இருப்பார். மேலும் அவர் ஒரு நல்ல நடிகராகவும் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

More News

ஒருவழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த 'காசே தான் கடவுளடா' படக்குழு..!

 இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகிய 'காசே தான் கடவுளடா' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீசுக்கு தயாரான நிலையில் பல்வேறு தடைகளுக்கு பின் தற்போது மீண்டும் ரிலீஸ் தேதி

விக்னேஷ் சிவன் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

சாதாரணமா வரலை, வேற மாதிரி வந்திருக்கேன்: 'பத்து தல' இசை வெளியீட்டு விழாவில் சிம்பு..!

'நான் சாதாரணமாக வரவில்லை, வேற மாதிரி வந்து இருக்கேன்' என 'பத்து தல' இசை வெளியீட்டு விழாவில் சிம்பு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

'துரோகமும் துரோகியும் ஏஜிஆருக்கு புதுசா என்ன? சிம்புவின் 'பத்து தல' டிரைலர்..!

சிம்பு நடிப்பில் உருவான 'பத்து தல' என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

1 நிமிஷத்திற்கு 5 லட்சம் கொடுங்க… மாப்பிள்ளை வீட்டில் ஹன்சிகாவின் தாயார் கண்டீஷன் போட்டாரா?

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம்வரும் ஹன்சிகா மோத்வானியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.