close
Choose your channels

கேப்டன் ரஹானேவை திடீரென கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்: காரணம் இதுதான்!

Saturday, January 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு இந்தியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்தபோது முதல் டெஸ்ட்டில் மட்டும் விளையாடி விட்டு கேப்டன் விராத் கோஹ்லி நாடு திரும்பினார். இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று, அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்ற பெருமை ரஹானேவை சேரும் என்பது அனைவரும் அறிந்ததே. பெரும் அனுபவம் இல்லாத இளம் அணியை வைத்து ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்தியதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென சூர்யா ரசிகர்கள் ரஹானேவை கொண்டாடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவராக சென்னைக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்

அந்த வகையில் ரஹானே இன்று சென்னை வந்தபோது செய்தியாளர்கள் அவரிடம் ’உங்களுக்கு பிடித்த தமிழ் படம் எது? என்று கேட்டனர். அதற்கு ’சமீபத்தில் நான் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ படத்தை ஆங்கில சப் டைட்டிலுடன் பார்த்தேன். அந்த படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என்று கூறினார். இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் அவர் ’மாஸ்டர்’ படத்தையும் பார்ப்பார் என்று விஜய் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.