close
Choose your channels

முதல்முறையாக தென்னிந்தியாவில் போட்டியிடும் ராகுல்காந்தி!

Sunday, March 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான போது அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி ராகுல்காந்தி தென்னிந்தியாவில் உள்ள ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறார்

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு என்ற தொகுதியிலும் போட்டியிடுவதாக அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. எனவே மக்களவை தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

ஏற்கனவே ராகுல்காந்தி கேரள மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக தென்னிந்தியாவில் போட்டியிடும் ராகுல்காந்தியை வயநாடு தொகுதி மக்கள் வெற்றி பெற செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.