close
Choose your channels

இந்தியக் கிரிக்கெட் அணியின்அடுத்த பயிற்சியாளர் யார்? வெளியான பரபரப்பு தகவல்!

Saturday, October 16, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக இருப்பதற்கு ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்து இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுவரை இந்தியக் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டுவரும் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு முடிவடைகிறது. இதையடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விரும்பினர். இதையடுத்து பிசிசிஐயும் அதற்கான முயற்சியை எடுத்துவந்தது.

இதையடுத்து நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே துபாயில் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்பதற்கான ஆலோசனை நடத்தப்பட்டத்தாகவும் அப்போது ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் கடும் வைரலாகி வருகிறது. இதையடுத்து விரைவில் பிசிசிஐ இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.