பயிற்சியாளர் பதவி… கடைசிவரை மௌனம் காத்த டிராவிட்டால் ஆடிப்போன பிசிசிஐ!

இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி கடந்த 2017 முதல் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பின் அவருடைய பணிக்காலம் முடிவடைகிறது. இதனால் அடுத்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தால் அணியை நன்றாக வழிநடத்துவார் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பிசிசிஐயின் தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகிய இருவரும் ராகுல் டிராவிட்டை சந்தித்தாகவும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கேட்டபோது அவர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியது. இதையடுத்து பிசிசிஐ இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டு, கடைசி தேதி அக்டோபர் 27 என நியமித்திருந்தது.

ஆனால் நேற்று மதியம் வரை ராகுல் டிராவிட் இதற்காக விண்ணப்பிக்கவில்லை. இதனால் பதறிப்போன பிசிசிஐயின் நிர்வாகிகள் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதையடுத்து நேற்று மதியத்திற்கு மேல் டிராவிட் தரப்பு இந்தியக் கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளருக்கு விண்ணப்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்தியக் கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் டிராவிட்டே தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் கணிப்புகள் கூறப்படுகிறது.

இந்நிலையில் டிராவிட் ஏற்கனவே பதவி வகித்துவரும் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பதவிக்கு விவிஎஸ் லக்ஷ்மன் தேர்ந்தெடுக்கப் படுவார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் பீல்டிங் கோச் பதவிக்கு அபேய் ஷர்மா, பௌலிங் கோச் பதவிக்கு பாஸ்மாம் பெரி ஆகியோர் விண்ணப்பித்து உள்ளனர்.

பிசிசிஐ இதற்கு முன்பு இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்காக இலங்கை அணி வீரர் ஜெயவர்தனே, ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங், விவிஎஸ் லக்ஷ்மன், அனில் கும்ப்ளே போன்றோரை அணுகியது. ஆனால் ரசிகர்கள் டிராவிட்டுக்கே வரவேற்பு அளித்த நிலையில் தற்போது பிசிசிஐயும் இந்த முடிவையே எடுக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறப்படுகின்றன.

More News

அஜித்தின் அட்டகாசமான பைக் பயண வீடியோ: இணையத்தில் வைரல்!

தல அஜித் கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் பைக் பயணம் செய்து வருகிறார் என்பதும் அவர் பயணம் செய்யும் போது இடையிடையே எடுக்கப்படும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

'ஜல்லிக்கட்டு' மட்டுமல்ல, இந்த பிரச்சனையும் இருக்கு: 'வாடிவாசல்' கதை குறித்து வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக

ஸ்ட்ரெயிட்டா கமல் சார்கிட்டே பேசப்போறேன்: இமானை குறிவைக்கும் இசைவாணி!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஆரம்பத்தில் ஒரு சில நாட்கள் வழக்கம்போல் போட்டியாளர்கள் ஒற்றுமையாக இருந்தார்கள். அதன் பின்னர் தற்போது அனைத்து

கமல்ஹாசன், விஜய்யுடன் இணைவது உண்மையா? வெற்றிமாறன் விளக்கம்

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய்சேதுபதி நடித்து வரும் 'விடுதலை' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில்

'அண்ணாத்த' ரிலீஸில் திடீர் திருப்பம்: 'எனிமி'க்கு சிக்கலா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டீஸர் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே