close
Choose your channels

தனது தாய்க்கு பிரசவம் பார்த்த நர்ஸ் ஆசையை நிறைவேற்றிய ராகுல்காந்தி!

Sunday, June 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்திக்கு பிரசவம் பார்த்து குழந்தை ராகுல்காந்தியை கவனித்து கொண்ட நர்ஸ் ராஜம்மாள் என்பவரின் நீண்ட நாள் ஆசையை ராகுல்காந்தி இன்று நிறைவேற்றி வைத்தார்.

டெல்லி மருத்துவமனை ஒன்றில் கடந்த 1970ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி ராகுல்காந்தி பிறந்தார். அந்த மருத்துவமனையில் சோனியாவுக்கு பிரசவம் பார்த்த குழுவில் இருந்தவர்களில் ஒருவர் கேரளாவில் உள்ள வயநாடு பகுதியை சேர்ந்த ராஜம்மாள் என்ற நர்ஸ். குழந்தை ராகுல்காந்திக்கு தேவையான அனைத்தையும் கவனித்து கொண்ட ராஜம்மாள், சமீபத்தில் அளித்த பேட்டியில், 'ஒரு பிரதமரின் பேரனை தான் கவனித்து கொண்டது பெருமையாக இருந்ததாகவும், அந்த நாளை தன்னால் மறக்கவே முடியாது என்றும் என் வாழ்நாளில் ஒருமுறையாவது மீண்டும் ராகுல்காந்தியை சந்திக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் ராஜம்மாள் வாழும் அதே வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டதால் பிரச்சாரத்திற்கு வரும்போது எப்படியும் ராகுல்காந்தியை சந்திக்க வேண்டும் என்று ராஜம்மாள் விரும்பியதாகவும் ஆனால் அது முடியாமல் போனதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் அந்த பகுதி காங்கிரஸ் பிரமுகர் மூலம் ராஜம்மாள் குறித்து கேள்விப்பட்ட ராகுல்காந்தி, வயநாடு சுற்றுப்பயணம் செய்யும்போது கண்டிப்பாக அவரை சந்திப்பதாக கூறியிருந்தாராம்.

அந்த வகையில் நேற்று வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி கூற வந்த ராகுல்காந்தி, ராஜம்மாள் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து அவரை நலம் விசாரித்தார். இந்த சந்திப்புக்காகவே தான் பலநாள் காத்திருந்ததாக ராஜம்மாள் கூறியதை கேட்டு ராகுல்காந்தி நெகிழ்ந்து போனார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.