close
Choose your channels

ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு!

Tuesday, April 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போதைய எம்.பியுமான ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த தகவலை அவரே தன்னுடைய டிவிட்டரில் தெரிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தனக்கு “லேசான அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்கவும்” எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்டத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 6 ஆம் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பரப்புரையில் ஈடுபட்டு இருந்த ராகுல்காந்தி நேற்றே தனது பரப்புரைகள் அனைத்தையும் ரத்து செய்வதாகத் தெரிவித்து இருந்தார். இதேபோல அம்மாநில முதல்வர் மம்தாவும் தனது தேர்தல் பரப்புரைகள் அனைத்தையும் ரத்து செய்வதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.