விஜய் ஆண்டனியின் உதவிக்கு நன்றி கூறிய ராய்லட்சுமி!

  • IndiaGlitz, [Wednesday,May 08 2019]

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராய்லட்சுமி நடித்த 'நீயா 2' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது சிண்ட்ரெல்லா மற்றும் ஸ்ரீகாந்துடன் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஸ்ரீகாந்துடன் அவர் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டைட்டில் இன்று வெளியாகியுள்ளது. இந்த டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தன்னுடைய படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு உதவி செய்த விஜய் ஆண்டனிக்கு நடிகை ராய்லட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அடர்ந்த காடுகளின் பின்னணியில் ராய்லட்சுமியின் அட்டகாசமான தோற்றத்தை கொண்ட இந்த பர்ஸ்ட்லுக் அனைவரையும் கவர்ந்துள்ளது.

எம்.வி.பன்னீர்செல்வம் கதை, திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை பார்த்திபன் என்பவர் இயக்கியுள்ளார். அருள்தேவ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சுதர்சன் படத்தொகுப்பு செய்து வருகிறார். இந்த படத்தை ஜாக்வார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

More News

டாஸ் வென்று வித்தியாசமான முடிவெடுத்த தல தோனி!

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே முக்கிய போட்டியான பிளே ஆஃப் போட்டி நடைபெறுகிறது.

'எஸ்கே 16' படத்தில் இணைந்த மேலும் மூன்று பிரபலங்கள்

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 'எஸ்கே 16' படத்தின் அப்டேட்டுக்கள் இடைவெளியின்றி வெளிவந்து அவரது ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

மழையை விட மேட்ச்தான் முக்கியமா? தமிழ்நாடு வெதர்மேன் ஆதங்கம்!

ஃபானி புயல் காரணமாகவும், அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டதன் காரணமாகவும்  தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது.

யுவன்ஷங்கர் ராஜா வெளியிட்ட அதிரடி டைட்டில்

ஒரு திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கின்றதோ, அதே அளவு வரவேற்பு தற்போது வெப் சீரீஸ்களுக்கும் இருக்கின்றது என்பதை நாம் அவ்வப்போது பார்த்து வருகின்றோம்.

'சன்' நிறுவனத்துடன் மீண்டும் இணைந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 16வது படமான 'எஸ்கே 16' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பதும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.