close
Choose your channels

ஓவியா ஆர்மியினர்களிடம் வசமாக சிக்கிய காயத்ரி

Tuesday, August 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை வேறு யாரும் இந்த ரியாலிட்டி ஷோவில் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டதால் அவரை திட்டம் போட்டு கார்னர் செய்து வெளியேற்றினர். அவரது வெளியேற்றத்திற்கு பிந்துமாதவியை தவிர பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒருவகையில் காரணம். ஓவியா வெளியேறி பின்னர் ஒருசிலர் நீலிக்கண்ணீர் வடித்தாலும் ஓவியாவின் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமானவர்கள் ஆரவ் மற்றும் காயத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இருவரையும் பழிவாங்க ஓவியா ஆர்மியினர், ஓவியா புரட்சி படையினர் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தனர். அந்த சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. நேற்று நடந்த எவிக்சன் நாமினேசனில் ரைசா மற்றும் காயத்ரி மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரைசா கிட்டத்தட்ட ஓவியாவின் மறு உருவமாக பார்க்கப்படுவதால் இந்த வார எவிக்சனில் ரைசா தப்புவதும், காயத்ரி வெளியேறுவதும் உறுதியாகியுள்ளது. நேற்று முதலே ரைசாவுக்கு வாக்குகள் குவிந்து வருவதால் காயத்ரி வசமாக ஓவியா ஆர்மியினர்களிடம் சிக்கிக்கொண்டார் என்பது இப்பொழுதே தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.