இளம் நடிகரின் மடியில் உட்கார்ந்து பியானா வாசிக்கும் பிக்பாஸ் தமிழ் நடிகை: காதலா?

  • IndiaGlitz, [Monday,August 10 2020]

இளம் நடிகர் ஒருவரின் மடியில் உட்கார்ந்து பிக்பாஸ் தமிழ் நடிகை ஒருவர் பியானோ வாசிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து இருவரும் காதலிக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ரைசா வில்சன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் நெருக்கமாக இருந்தார் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் இணைந்து ’பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்தனர். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஹரிஷ் கல்யாண் குறித்த பதிவுகளை செய்து வந்த ரைசா, ஒரு கட்டத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் தனக்கு க்ரஷ் இருப்பதாகவும் அவருடன் டேட்டிங் செல்ல விரும்புவதாகவும் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

ஆனால் அதன் பின் சில நாட்கள் கழித்து தனது காதலர் என்று ஒருவரை அறிமுகம் செய்த ரைசா, அவரையே திருமணம் செய்ய போவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாண் மடியில் உட்கார்ந்து பியானோ வாசிக்கும் புகைப்படம் ஒன்றை ரைசா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். ஆனால் இந்த புகைப்படம் எடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் ’பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பிற்காக இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் கூறினார். ஆனால் அதே நேரத்தில் 2020 ஆம் ஆண்டை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அதனால் இந்த புகைப்படத்திற்கு ஒரு வயதுதான் என்று கூறியுள்ளார் 

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்டுகளை அளித்து வருகின்றனர். இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதால் நீங்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று கமெண்ட்டும் இதில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

அண்ணன் முறை வாலிபருடன் மகள் உறவு: அவமானத்தில் தூக்கில் தொங்கிய பெற்றோர்

தங்களுடைய மகள் அண்ணன் முறை உள்ள வாலிபர் ஒருவருடன் உறவு வைத்துக் கொண்டதை கண்டித்து பார்த்தும் அவர் கேட்காததால் அவமானத்தில் அவருடைய பெற்றோர்கள் தூக்கில் தொங்கிய

மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி நடுரோட்டில் மரணம்: என்ன நடந்தது?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் ஒரு சிலர் மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில்

இந்தோனேசியாவில் 400 ஆண்டு பழமையான எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட பயங்கரம்!!!

இந்தோனசியாவில் 100 க்கும் மேற்பட்ட ஆபத்தான எரிமலைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபல இயக்குனரின் அடுத்த படம் குறித்த புதிய அப்டேட்: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு

ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்து வரும் படங்களில் ஒன்றான 'ஜெயில்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும்

மூணாறு நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!!!

கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை அடுத்த ராஜமலா, பெட்டிமாடா பகுதியில் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31