close
Choose your channels

எனக்காக ஒரு கவிதை எழுதுங்கள்: ஹரிஷ் கல்யாணிடம் வேண்டுகோள் விடுத்த பிக்பாஸ் நடிகை

Friday, August 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன், பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே ஒருவருக்கு ஒருவர் ஈர்ப்புடன் இருந்ததாக கூறப்பட்டது. அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் ’பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்

மேலும் அவ்வப்போது ஹரிஷ் கல்யாண் குறித்து ரைசா வில்சன் தனது சமூக வலைத்தளத்தில் காதலுடன் கூடிய கருத்துக்களைக் பதிவு செய்து வருவதும் ஹரிஷ் கல்யாண் உடன் டேட்டிங் செல்ல விரும்புவதாகக் கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைப்பக்கத்தில் ஒரு ஆங்கிலக் கவிதையை எழுதியுள்ளார். இந்த கவிதையை அனைவரும் ரசித்து வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்த நிலையில், நடிகை ரைசா வில்சன் ஹரிஷின் கவிதையை பாராட்டிவிட்டு, ‘என்னைப் பற்றியும் ஒரு கவிதை எழுதுங்கள் ஹரிஷ்’ என்று கூறியுள்ளார். ரைசாவின் கோரிக்கையை ஏற்று ஹரிஷ் கவிதை எழுதுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்

View this post on Instagram

#dearuniverse #myrandomkirukals #foryou

A post shared by Harish Kalyan (@harish_kalyan) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.