close
Choose your channels

ராஜமவுலியின் அடுத்த படத்தில் வித்தியாசமான முயற்சி

Thursday, July 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆகின. இதுவரை வெளிநாடுகளில் இந்திய படங்கள் என்றால் இந்தி படங்களே என்று நினைத்து கொண்டிருந்தவர்களை தென்னிந்தியாவிலும் ஒரு திரையுலகம் இருக்கின்றது என்பதை நிரூபித்த படங்கள் தான் இவை இரண்டும்

இந்த நிலையில் பொதுவாக இயக்குனர்கள் தாங்கள் இயக்கிய ஹிட்டான படங்களின் அடுத்த பாகங்களைத்தான் இயக்குவது வழக்கம். ஆனால் எஸ்.எஸ்.ராஜமவுலி வித்தியாசமாக 'பாகுபலி' படத்தின் முந்தைய பாகங்களை இயக்கவுள்ளார். அதாவது 'பாகுபலி' படத்தின் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி மற்றும் சத்யராஜ் நடித்த கட்டப்பா ஆகிய கேரக்டர்களின் முந்தைய காலத்திய கதையை சொல்ல போகிறார்.

மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக உருவாகவிருப்பதாகவும், அதில் இந்த படம் தொடராக வெளிவரவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை ராஜமவுலியுடன் இணைந்து தேவகட்டா என்பவர் இயக்கவுள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது ராம்சரண்தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.