'பாகுபலி 2' படத்தின் 4 நாள் தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,May 02 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் சுமார் 9000 திரையரங்குகளில் வெளியானது. வார இறுதி விடுமுறை மட்டுமின்றி மே 1ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தன்றும் உலகம் முழுவதும் விடுமுறை என்பதால் இந்த படத்திற்கு கூடுதலான ஒரு விடுமுறை நாள் இயற்கையாகவே அமைந்துவிட்டது.
உலகம் முழுவதும் இந்த படம் கடந்த 4 நாட்களில் ரூ.500 கோடி வசூலை நெருங்கிவிட்ட நிலையில் தமிழகத்தில் இந்த படம் ரூ.43 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரு.4.27 கோடியும், செங்கல்பட்டு பகுதியில் ரூ.9.8 கோடியும், கோவையில் ரூ.6.4 கோடியும், நெல்லை-குமரியில் ரூ.2.65 கோடியும் இந்த படம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வேலை நாளிலும் பெரும்பாலான திரையரங்குகள் பார்வையாளர்களால் நிரம்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் இந்த படத்தின் மொத்த வசூல் புதிய சரித்திரம் படைக்கும் என கருதப்படுகிறது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த பிரபல நகைச்சுவை நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்களை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் நட்சத்திரங்களும் விரும்புவதுண்டு. வளர்ந்து வரும் இளையதலைமுறை நட்சத்திரங்களுக்கு ஒரு வழிகாட்டியாக அவர் இருந்து வருவதே இதற்கு காரணம்...

'விஸ்வரூபம் 2' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான விஸ்வரூபம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி கடந்த இரண்டு வருடங்களாக தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது...

அதிமுகவில் மேலும் ஒரு புதிய அணி: எடப்பாடியார் ஆட்சி நீடிக்குமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி-ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. இந்த நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பின்னர் சசிகலா அணி தினகரன் அணியாக மாறியது. தற்போது தினகரன் சிறைக்கு பின் எடப்பாடி பழனிச்சாமி அணியாக உள்ளது...

சொன்னதை செய்ய ஆரம்பித்துவிட்டார் விஷால்! வாழ்த்துக்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் விஷால் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று புதிய மற்றும் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்பது தான்...

'பாகுபலி 2' வெற்றியை அடுத்து ராஜமெளலியின் அடுத்த பயணம் ஆரம்பம்

கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் மிக அபாரமான வசூலை பெற்று வருகிறது. வெளியான நான்கே நாட்களில் ரூ.500 கோடி என்ற வசூலை தொட்டுவிட்ட நிலையில், ஏற்கனவே எதிர்பார்த்த ரூ.1000 கோடி வசூலை மிக விரைவில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...