ஜனவரி 24 ரிலீஸ் பட்டியலில் இணைந்த 3வது படம்!

  • IndiaGlitz, [Sunday,January 19 2020]

கடந்த பொங்கல் பண்டிகையின்போது வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படமும் தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படமும் இன்னும் தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் வரும் 24ஆம் தேதி அதாவது வரும் வெள்ளியன்று ஏற்கனவே இரண்டு படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு படமும் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 24ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’சைக்கோ’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வைபவ், யோகி பாபு நடித்த ’டாணா’ என்ற திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் தற்போது சேரன் நடித்துள்ள ’ராஜாவுக்கு செக்’ என்ற படமும் ஜனவரி 24ஆம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தர்பார் மட்டும் ’பட்டாஸ்’ திரைப்படங்கள் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த மூன்று திரைப்படங்களுக்கும் போதுமான திரையரங்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

ரஜினிகாந்த் இதற்கெல்லாம் அஞ்சமாட்டார்: ஹெச்.ராஜா

ரஜினிகாந்த் அவர்கள் எந்த மிரட்டலுக்கும் சலசலப்புக்கும் அஞ்ச மாட்டார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் இடையே அவர் 'ஜனகணமன'

ஒரு டிரில்லியன் நிறுவனங்களில் பட்டியலில் கூகுள்

ஆப்பிள், அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே இதுவரை உலகில் ஒரு ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை பெற்றுள்ள நிலையில்

5 தேசிய விருதுகள் பெற்ற பிரபல நடிகை சென்ற கார் விபத்து!

ஐந்து முறை தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகை கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தது பாலிவுட் திரை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 

'நீயா நானா' கோபிநாத் தந்தை மறைவு: திரையுலகினர் இரங்கல்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'நீயா நானா' என்ற நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களாக தொகுத்து வழங்கி வரும் கோபிநாத் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றவர் என்பது தெரிந்ததே.