காவல்துறைக்கு ரஜினி தரப்பில் எழுதிய முக்கிய கடிதம்!

  • IndiaGlitz, [Sunday,November 29 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்பதும் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே மக்களிடையே எழுச்சி வர வேண்டும் என்றும், அவ்வாறு எழுச்சி வந்த பின்னரே அரசியலுக்கு வருவேன் என்று கூறியுள்ள ரஜினிகாந்த் நாளை என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை ஆவலுடன் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டை விட்டு வெளியே அதிகம் வராமல் இருந்த ரஜினிகாந்த் தற்போது பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நாளை வர இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ராகவேந்திரா மண்டபத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் சார்பில் காவல் துறைக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி வெளியே வருவதால் அவரை பார்க்க ரசிகர்கள் அதிகம் குவிய வாய்ப்பு இருப்பதால் காவல்துறையினர் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளிவர வாய்ப்பு இல்லை என்றும் திரையரங்குகளில் தான் வெளிவரும்

ரம்யாவுக்கு விஷப்பரிட்சை வைக்கும் கமல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் கமல் ஒரு சில போட்டியாளர்களிடம் கேள்வியை எழுப்பி பதிலை பெற்றார் என்பதும், அமைதியாக இருந்த ஷிவானியை கூட பேச வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

பஜாஜ் ஆயிலாக மாறிய பஜ்ஜி ஆயில்: நிஜமானது விவேக் காமெடி!

நடிகர் விவேக் ஒரு படத்தில் பஜ்ஜியில் உள்ள எண்ணெயை பிழிந்து வாகனங்களுக்கு செலுத்தும் காமெடி காட்சி ஒன்றில் நடித்து இருப்பார். அந்த காமெடி காட்சி கிட்டத்தட்ட இன்று உண்மையாகியுள்ளது 

ரஜினிகாந்த் தெளிவான முடிவை எடுப்பார்: தமிழக அமைச்சர் பேட்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கி வரும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் திடீரென சமீபத்தில் வெளியான தகவலின்

இது குரும்படமும் இல்லை, குருமா படமும் இல்லை; அர்ச்சனாவை கலாயத்த கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 55 நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு குறும்படம் கூட போடவில்லை என்ற அதிருப்தி பார்வையாளர்கள் மத்தியில் இருந்தது. குறிப்பாக அர்ச்சனா தன்னுடைய மைக்கையும்