close
Choose your channels

ரஜினியின் அரசியல் முடிவு: அதிர்ச்சியில் ரசிகர் மாரடைப்பால் மரணம்

Friday, March 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தான் முதல்வர் பதவியை ஏற்கபோவதில்லை என்றும், கட்சிக்கு மட்டும் தலைமை வகித்து வழிகாட்டியாக இருக்க போவதாகவும் அறிவித்தார். ரஜினியின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சியை அடுத்த மணப்பாறை என்ற பகுதியை சேர்ந்த பாபா முருகேசன் என்பவர் மணப்பாறை நகர ரஜினி மக்கள் மன்றம் துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். ரஜினியின் தீவிரமான ரசிகரான இவர், ரஜினியின் அரசியல் வருகை குறித்த நேற்றைய பேட்டியை தனது செல்போனில் நேரலையில் பார்த்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ரஜினியின் பேச்சில் முதல்வர் பதவி குறித்து எடுத்த முடிவால் அதிர்ச்சி அடைந்த பாபா முருகேஷ் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக தெரிகிறது. இதனால் அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதி ரஜினி ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்,.

மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விபத்து ஒன்றில் சிக்கி பாபா முருகேசன் சிகிச்சை எடுத்து கொண்டு வந்ததாகவும், இந்த நிலையில் தான் ரஜினியின் முடிவை அறிந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது

பாபா முருகேசன் தன் வாழ்நாள் ஆசையாக ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசையுடன் இருந்ததாகவும், ஆனால் கடைசி வரை அவருடைய ஆசை நிறைவேறாமல் போய்விட்டதாகவும் அவரது நண்பர்கள் வருத்தத்துடன் கூறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.