ரஜினி வீட்டின் முன் அதிகாலையிலேயே குவிந்த ரசிகர்கள்: அரசியல் அறிவிப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 5ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் அவர் மாவட்டச் செயலாளர்களையும் ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக முறைப்படி அவர் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதால் இந்த சந்திப்பின் போது அவர் அரசியல் கட்சி குறித்தும், அரசியல் பிரவேசம் குறித்தும், அரசியல் கட்சி தொடங்கும் தேதி குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் குறித்த அறிவிப்பை நேரடியாக கேட்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சென்னைக்கு அவரது ரசிகர்கள் குவிந்துள்ளனர். ஒரு பக்கம் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் குவிந்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டின் முன்னர் ரஜினி ரசிகர்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் கொடியை வைத்து கோஷமிட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினியின் இன்றைய அறிவிப்பு தமிழக அரசியலில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.