ரஜினி ஒரு கோழை. சுப்பிரமணியன் சுவாமி

  • IndiaGlitz, [Saturday,March 25 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்று நேரத்திற்கு முன்னர் தான் இலங்கை செல்வதாக திட்டமிட்டிருந்ததை ரத்து செய்வதாக அறிக்கை ஒன்றின்மூலம் தெரிவித்தார். திருமாவளவன், வைகோ, வேல்முருகன் போன்ற அரசியல் தலைவர்கள் தன்னை இலங்கை செல்ல வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொண்டதாகவும், அவர்கள் கூறும் காரணம் தனக்கு உடன்பாடு இல்லை எனினும் அவர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டதால் தனது பயணத்தை ரத்து செய்வதாகவும் தெரிவித்திருந்தார்

ரஜினியின் இந்த முடிவை சுப்பிரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார். அனைத்து சினிமா ஸ்டார்களும் கோழைகள் என்றும், ரஜினிகாந்த் மட்டும் அதில் வேறுபட்டவர் இல்லை என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக வலைத்தளத்தில் 'ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு எழுந்துள்ள எதிர்ப்பையும் மீறி பயப்படாமல் அவர் இந்த விழாவில் கலந்து கொண்டால் அவரை தாராளமாக பாராட்டலாம்' என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இலங்கை செல்வது குறித்து ரஜினிகாந்த் எடுத்த முக்கிய முடிவு

லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் தனது தாயார் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலம் இலங்கையில் கட்டியுள்ள 150 வீடுகளை தமிழர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது இந்த நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் செல்லக்கூடாது என்று ஒருசிலர் அரசியல் தலைவர்களும், செல்ல வேண்டும் &#

ஃபேஸ்புக்கில் காதலித்து தியேட்டரில் கல்யாணம் செய்த பெண்ணின் கணவர் திடீர் மாயம்

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பதெல்லாம் அந்த காலம். தற்போது ஃபேஸ்புக், டுவிட்டரில் காதலித்து கல்யாணம் செய்வதுதான் டிரெண்டாக உள்ளது.

மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியுடன் விஷால் டீம் சந்திப்பு

வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இளையதளபதியிடம் பாராட்டு பெற்ற தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன்

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த 3.5 வயது பிரிஎல்.கே.ஜி மாணவி நேத்திரா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கான தேர்வில் 4 வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்துகொண்டு இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஆர்.கே.நகரில் அரங்கேறிய எட்டு கேலிக்கூத்துகள்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.