மலேசியாவில் இருந்து சென்னை திரும்புகிறாரா ரஜினி?

  • IndiaGlitz, [Thursday,November 05 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து இரண்டு மாதங்கள் மலேசியாவில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் ஒரு சிறு விடுமுறையில் சென்னை திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் 10ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை அடுத்து இந்த பண்டிகையை குடும்பத்தினர்களுடன் கொண்டாடுவதற்காக ரஜினி சென்னை திரும்பவுள்ளதாகவும், தீபாவளி முடிந்தவுடன் மீண்டும் மலேசியா சென்று படக்குழுவினர்களுடன் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி சென்னை திரும்பினாலும் படக்குழுவினர் மலேசியாவிலேயே இருப்பார்கள் என்றும், ரஜினி திரும்பும் வரை ரஜினி அல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

More News

'எந்திரன் 2' படத்தில் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்?

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து தற்போது ஷங்கர் 'எந்திரன் 2' படத்திற்கான...

தூங்காவனம் - கபாலி ஒரு அபூர்வ ஒற்றுமை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

நயன்தாராவின் ரீமேக் படத்தில் அஜீத்?

'சிறுத்தை சிவா' இயக்கத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்த 'வேதாளம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீசாகவுள்ள நிலையில் அஜீத்தின்....

'வேதாளம்': அஜீத் உறவினர்களுக்காக சிறப்பு காட்சி

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது...

நடிகை ஆஸ்னா ஜாவேரியுடன் திருப்பதியில் திருமணமா? சந்தானம் மறுப்பு

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', இனிமே இப்படித்தான் படங்களில் ஜோடியாக நடித்த சந்தானம் மற்றும் ஆஸ்னா ஜாவேரி...