சூப்பர் ஹீரோ தோனியின் கிராபிக்ஸ் நாவலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்… வைரல் புகைப்படம்!

இந்தியக் கிரிக்கெட்டின் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி அவெஞ்சர்ஸ் போல காமிக்ஸ் நாவலில் நடித்திருக்கும் தகவலை நாம் ஏற்கனவே பார்த்தோம். புராண காலத்து ஹீரோ கதையான காமிக்ஸ் கதையை 3டி உருவில் அனிமோஷன் காட்சிகளாக உருவாக்கப்படு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து தல தோனியை பழைய காலத்து சூப்பர் ஹீரோவைப் போல அனிமோஷன் தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் பலரும் கடும் வியப்பை வெளிப்படுத்தி வந்தனர். மேலும் இந்தக் காமிக்ஸ் கதையை எப்படி படிப்பது? எப்போது வெளிவரும் என்பது போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் தோனியின் சூப்பர் ஹீரோ 3டி அனிமேஷன் கிராபிக்ஸ் நாவலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டு உள்ளார். தமிழில் ரமேஷ் தமிழ்மணி என்பவர் “ஏழாம் அறிவு“ திரைப்படம் மாதிரியே பண்டைய காலத்து சூப்பர் ஹீரோவை வைத்து கற்பனையாக உருவாக்கியதுதான் இந்த நாவல் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக நாவல் என்றால் புத்தகத்தின் வடிவில் இருக்கும். ஆனால் இந்த நாவலை கிராபிக்ஸ் வடிவில் 3 டி காட்சிகளாக உருவாக்கப்பட்டு வெளியிட்டு இருக்கிறது.

மேலும் “அதர்வா தி ஆரிஜன்“ எனும் பெயரில் உருவாக்கப்பட்டு இருக்கும் இநத் கிராபிக்ஸ் நாவலை மகேந்திரசிங் தோனிக்கு சொந்தமான தோனி எண்டர்டைமண்ட் நிறுவனம் தாயாரித்து இருப்பதும் இது அமோசானில் வெளிவர இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்ற பிறகு தல தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கிராபிக்ஸ் காட்சிகளில் அதுவும் 3டி அனிமேஷினில் ஒரு புராண காலத்து ஹீரோவாக தோனி அவர்கள் வலம்வர இருக்கிறார். இந்த கிராபிக்ஸ் நாவல் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த கிராபிக்ஸ் நாவலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டதோடு தொலைபேசியில் தோனியை அழைத்து பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

More News

என்னவொரு புத்திசாலித்தனம்? 4 ஆவது மாடியில் தொங்கியபடி க்ளீனிங்… பதற வைக்கும் வீடியோ!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபத் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் பெண் ஒருவர் ஜன்னலை

ஒரே இரவில் கோடீஸ்வரரான செங்கல் வியாபாரி… தேடிவந்த அதிர்ஷ்டம்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் குறைந்த அளவில் செங்கல் வியாபாரம் செய்துவந்த வியாபாரி ஒருவருக்கு நிலத்தைத் தோண்டும்போது

குண்டு மழைகளுக்கு இடையே காதல்… நெஞ்சை துளைக்கும் உக்ரைன் புகைப்படம்!

அன்பு எல்லாவற்றையும் விட மிகப்பெரிது என்பதை உணர்த்தும் விதமாக உக்ரைன் நாட்டில் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கே இப்படியொரு சிக்கலா? பரபரப்புத் தகவல்!

இந்தியக் கிரிக்கெட்டில் அணியில் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்து தனது திறமையால்

அபாயத்தில் இருக்கும் உக்ரைனுக்கு “நேட்டா“ தன் படைகளை அனுப்பாதது ஏன்?

உக்ரைன் நாட்டில் ஏற்கனவே ரஷ்யா தாக்குதலை துவங்கிவிட்ட நிலையில் நேட்டா அமைப்பு தனது படைகளை அந்நாட்டிற்குள்