ரஜினியால் இவரை எச்சரிக்கை செய்ய முடியுமா? ரவிகுமார் எம்பி கேள்வி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள், இரண்டே நாட்களில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தாலும் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு நடவடிக்கைக்கு கமல்ஹாசன் உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் தமிழக அரசின் இந்த முடிவுக்கு தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். அவர் தனது டுவிட்டில் கூறியதாவது: ‘இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசுக்கு ரஜினி விடுத்த எச்சரிக்கை குறித்து கருத்து கூறிய விடுதலை சிறுத்தைகள் எம்பி டாக்டர் ரவிக்குமார் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ’மாநில அரசை எச்சரித்துள்ள ரஜினிகாந்த் மத்திய அரசை எச்சரிப்பாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். டாஸ்மாக் விவகாரம் குறித்த ரஜினிகாந்த் அவர்களின் அறச்சீற்றம் உண்மை என்றால் நாடு முழுவதும் மதுக்கடைகளை திறக்க அனுமதித்த மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை அவர் அரசை எச்சரிக்கை செய்ய வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார். டாக்டர் ரவிக்குமாரின் இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்த்தும் கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன.

More News

மகனுக்கு முடிவெட்டி சிகை அலங்காரம் செய்த பிரபல தமிழ் ஹீரோ!

கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

'விண்ணை தாண்டி வருவாயோ 2' டீசரை வெளியிட்ட கெளதம் மேனன்?

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த 'விண்ணை தாண்டி வருவாயோ' திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கார்த்திக், ஜெஸ்ஸி என்ற இரண்டு கேரக்டர்களை

சென்னையில் மட்டுமே 500க்கும் மேல்: கொரோனாவின் கோரத்தாண்டவம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்று சென்னையில் மட்டுமே கொரோனாவுக்கு 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்படைந்ததாக

ஊரடங்கு நேரத்தில் 22 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 80 வயது முதியவர்

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்திலும் 22 வயது இளம் பெண் ஒருவரை 80 வயது முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

அடித்தட்டு மக்களின் அடிவயிற்றில் அடிக்கும் முதலாளித்துவக் கிருமி: கொரோனா குறித்து வைரமுத்து கவிதை

கவியரசு வைரமுத்து கடந்த சில நாட்களாக கொரோனா குறித்த கவிதைகளை தனது சமூக வலைத்தளத்தில் எழுதி வருகிறார் என்பதும் அவரது கவிதைகளுக்கு நெட்டிசன்களின் மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது