ரஜினிக்கு ஹீரோவாகும் தகுதி இல்லை; நண்பர் எழுதிய புத்தகத்தில் ஆச்சரிய தகவல்!

  • IndiaGlitz, [Thursday,January 05 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் கன்னட நடிகருமான அசோக் என்பவர் ரஜினி குறித்து எழுதிய புத்தகத்தில் ரஜினிக்கு ஹீரோவாகும் தகுதி இல்லை என்று எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை அடையாறு பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது அவருக்கு நண்பரான அசோக் என்பவர் ரஜினி குறித்து எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியானது. கெளயா சிவாஜி’ என்ற புத்தகத்தை அசோக் எழுதி உள்ள நிலையில், அந்த புத்தகத்தில் அவர் சில ஆச்சரியமான தகவல்களை தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறு பிலிம் இன்ஸ்டியூட்டில் ரஜினியை முதன் முதலாக தான் சந்தித்த போது நெருங்கிய நண்பரானோம் என்றும் அன்று முதல் இன்று வரை நட்புடன் இருக்கிறோம் என்றும் அவர் அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார். ரஜினியுடனான நட்பு பள்ளி நாட்களில் இருந்த நட்பு போல் இருந்தது என்றும் தான் கன்னடத்தில் துணை நடிகராக மாறிய போது ரஜினி இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாறினார் என்றும் ஆனாலும் எங்களுக்குள் நட்பு இன்னும் அப்படியே உள்ளது என்றும் அவர் அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அந்த புத்தகத்தில் ’ரஜினி நடிக்க வந்த காலத்தில் அவருக்கு ஹீரோவாக அப்போது என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்ததோ, அந்த தகுதி எதுவுமே இல்லை என்றும் அவருடைய நிறம் மற்றும் கவர்ச்சி ஆகியவை ஹீரோவுக்கு தகுதியாக இல்லாமல் இருந்தது என்றும் தெரிவித்தார்.

ஆனால் சினிமாவில் உள்ள அனைத்து மூட நம்பிக்கைகளையும் உடைத்து யாரும் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு அவர் உச்சத்தில் இருக்கின்றார் என்றும் இப்போதும் அவரை சந்திக்கும் போது சினிமாவில் நினைத்து பார்க்க முடியாத ஒரு அதிசயமாக தான் அவரை நான் பார்க்கிறேன் என்றும் அவர் அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
 

More News

ஹங்கேரியில் தொழில்நுட்ப பணிகள்.. சமந்தாவின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய தகவல்!

 சமந்தா நடித்த 'யசோதா' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான 'சாகுந்தலம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

இது அலுவலகமா? தியேட்டரா? 'வாரிசு' டிரைலரை கொண்டாடிய ஐடி ஊழியர்கள்!

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியான நிலையில் இந்த டிரைலர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு சிலர் இந்த டிரைலருக்கு நெகட்டிவ்

சிம்புவின் 'பத்து தல' படத்தின் மாஸ் தகவல்.. ரசிகர்கள் உற்சாகம்!

சிம்பு நடித்த 'பத்து தல' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. சமீபத்தில் இந்த படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாகும்

வாரிசு பட ட்ரைலரில் இதை கவனித்தீர்களா?

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த டிரைலர் வெளியாகி சில மணி நேரத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை

423 விபத்துக்கள் நடந்த பின்னரும் அலட்சியம்.. பரிதாபமாக உயிரிழந்த சென்னை இளம்பெண்

 தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் 423 விபத்துகள் நேர்ந்த பின்னரும் தேசிய  நெடுஞ்சாலை துறையின் அலட்சியம் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும்