close
Choose your channels

ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும்: வழக்கறிஞர் தகவல்

Thursday, December 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை தொடர்பாக ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது திடீரென வன்முறை ஏற்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது

இந்த ஆணையம் சுறுசுறுப்பாக விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் விசாரணை ஆணையம் தனது விசாரணையை துவக்கியுள்ளது

இந்த நிலையில் துப்பாக்கி சூட்டின் போது ஏற்பட்ட வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என்று பேட்டி அளித்த ரஜினிகாந்த் விசாரணை ஆணையம் முன் ஆஜராக வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகாமல் அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை செய்யப்படும் என விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.