close
Choose your channels

ரஜினியின் அடுத்த இரண்டு படங்களை தயாரிக்கும் நிறுவனம் இதுவா? டபுள் ஜாக்பாட்!

Thursday, October 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படமான ’தலைவர் 170’ திரைப்படத்தை சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தை இயக்கிய சிபிச்சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லைகா நிறுவனத்திற்கு ரஜினிகாந்த் இன்னொரு படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ’தலைவர் 171’ என்ற திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வெற்றியை அடுத்து ரஜினிகாந்த் அவரது இயக்கத்தில் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் தள்ளிப் போனதை அடுத்து தற்போது அவர் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ’தலைவர் 171’ திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.